For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

07:22 PM Jun 04, 2025 IST | Murugesan M
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம்   கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்

ஆர்.சி.பி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி  ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்குப் பின்னர் வென்றனர்.

Advertisement

கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலர் சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்றதால் அவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.

Advertisement

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
நிகழ்விடத்திலேயே 3 பேர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது வரை கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Tags :
Advertisement