அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!
02:37 PM Jun 07, 2025 IST | Murugesan M
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் கனமழையால் 64 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
அசாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
பிரம்மபுத்திரா உள்ளிட்ட 9 முக்கிய ஆறுகள், மூன்று இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் அமைந்துள்ள மாயோங் சபோரி காஸ்பாரி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement