For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அஜித் கொலை வழக்கு - சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

10:38 AM Jul 04, 2025 IST | Ramamoorthy S
அஜித் கொலை வழக்கு   சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறார். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் நிகழ்வை அவர் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், வழக்கின் முக்கிய ஆதாரமாக அது மாறியது.

Advertisement

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த சக்தீஸ்வரன், உரிய பாதுகாப்பு வழங்கக்கூறி தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பினார். இதைத்தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பேரில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement