For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

06:45 PM Jun 01, 2025 IST | Ramamoorthy S
ஆசிய தடகளப் போட்டியில் 2 ம் இடம் பிடித்த இந்தியா   வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கப்பட்டியலில் இரண்டாம் பிடித்த இந்திய வீரர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், 43 நாடுகள் பங்கேற்ற 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களைக் குவித்து இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரவித்துள்ளார்.

Advertisement

வெற்றி பெற்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களுக்கும் என் இதய பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளப்பெரும் சாதனையில் மகளிரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3:34:18 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு என் மனமார்ந்த பாரட்டுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற நால்வர் அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனை செல்வி. சுபா வெங்கடேசன் அவர்களுக்கு என் சிறப்பு பாராட்டுகள். அதே போல் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 43.86 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், குறிப்பாக தமிழக வீரங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த இனிய தருணத்தில், கேலோ இந்தியா போன்ற அருந்திட்டங்களைக் கொண்டுவந்து இந்தியாவின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி, பெண்களின் சீரிய சாதனைக்கு வித்திட்டுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Advertisement
Tags :
Advertisement