For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

07:55 PM Jun 03, 2025 IST | Murugesan M
ஆபரேஷன் சிந்தூர்   கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட இடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தியா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலை விடக் கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், பெஷாவர், ஜாங் உள்பட 8 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதைக் குறிக்கும் வரைபடங்கள் பாகிஸ்தான் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தற்போது பகிர்ந்த தகவல்களை இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் குறித்த முழு விபரங்களைப் பகிராதது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை என்றும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து சேதத்தை அறிவிக்கட்டும் என இந்தியா அமைதி காத்ததாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement