இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் - சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!
06:35 AM May 10, 2025 IST | Ramamoorthy S
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது.
Advertisement
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என்பது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து ஐஎம்எப் அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement