For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் - பிரதமர் மோடி

06:58 AM May 07, 2025 IST | Ramamoorthy S
இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும்   பிரதமர் மோடி

எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. அதனைத் தொடந்ர்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் உருவாகி வருகிறது.

Advertisement

அத்துடன் இருநாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் கூறி வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முன்பு இந்தியாவுக்கு சொந்தமான நதி நீர் எல்லையை தாண்டி பாந்ததாகவும், ஆனால் இனி இந்தியாவின் நதி நீர் இந்தியாவுக்குளேயே பாய்ந்து, இந்தியாவுக்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement