For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியா தாக்குதல் - ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!

08:30 AM May 07, 2025 IST | Ramamoorthy S
இந்தியா தாக்குதல்    ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியதை ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

Advertisement

அதே வேளையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலை ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். “இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” என பொதுமக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement