இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்துள்ள போர் : சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
02:31 PM May 09, 2025 IST | Murugesan M
சண்டிகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சண்டிகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என இந்திய விமானப்படை எச்சரித்தது.
Advertisement
இதனையடுத்து சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், பால்கனியில் நிற்கக் கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
இதனைத் தொடர்ந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
Advertisement