For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

07:09 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

வரும் காலங்களில் இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்திய மொழிகளில் கல்வியை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வரும் காலங்களில் இந்திய மற்றும் உள்ளூர் மொழிகளே கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளும் உள்ளூர் மொழிகளில் பாடங்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்த அவர், பாடங்களின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க தொழில்நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.

இதன்மூலமாக கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பாடங்களை அவர்கள் விரும்பும் மொழியில் கற்றுக்கொள்ள முடியும் எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement