For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

07:20 PM Feb 05, 2025 IST | Murugesan M
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதில், திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆறு மணியளவில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

வாக்கு பதிவு நிறைவு பெற்றவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 64 புள்ளி 02 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement