உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
02:20 PM May 08, 2025 IST | Ramamoorthy S
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாசி அருகே கங்கனானி பகுதியில் அதிகாலை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர்.
Advertisement
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து விசாரிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement