For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

07:10 PM Jun 06, 2025 IST | Murugesan M
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில், ஆயிரத்து 315 மீட்டர் நீளத்திற்கு உலகின் உயரமான பாலம் கட்டப்பட்டுள்ளது.

Advertisement

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்குகிறது.

இந்நிலையில், கவுரி மற்றும் பக்கல் பகுதிகளை இணைக்கும் பிரம்மாண்டமான செனாப் ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் செனாப் ரயில் பாலத்தில் நடந்து சென்று பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து நாட்டின் முதல் கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கத்ரா மற்றும் ரியாசி மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், 725 மீட்டர் நீளத்திற்குக் கட்டுப்பட்டுள்ள நவீன அஞ்சி பாலத்தைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனை அடுத்து கத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர்,  பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், ரயில்வே ஊழியர்களுடனும் பிரதமர் மோடி உற்சாகமாக உரையாடினார்.

பின்னர், கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் விரைவு ரயில்களின் சேவையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Advertisement
Tags :
Advertisement