For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை - பெற்றோர் புகார்!

03:17 PM Nov 05, 2025 IST | Ramamoorthy S
ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை   பெற்றோர் புகார்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ - மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஏற்காடு அடுத்த வாழவந்தி கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் 42 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் நாள்தோறும் மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.

Advertisement

இதையடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பள்ளியில் போர் வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்த நிலையில், சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கடும் அவதிக்கு உள்ளான மாணவ - மாணவிகள், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement