கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்!
04:45 PM Mar 12, 2025 IST | Murugesan M
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஜிஸ்வான் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். புன்னகை நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் இருவர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement