கனடாவின் ஆல்பர்ட்டா - பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!
06:01 PM Jun 07, 2025 IST | Murugesan M
கனடாவின் ஆல்பர்ட்டா - பிரிட்டிஷ் கொலம்பியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுத் தீ அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆல்பர்ட்டா எல்லை அருகே வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவி வருகிறது.
Advertisement
இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement