For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

06:12 PM Jun 07, 2025 IST | Murugesan M
கனடா   பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

பிரேரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க முடியாமல் கனடா அதிகாரிகள் திணறி வருகின்றனர். அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தர எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. பிரேரி காட்டுத்தீ காரணமாக, தெற்கு ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கை புகை சூழ்ந்துள்ளது. மேலும், டொராண்டோ, ஒட்டாவா மற்றும் மாண்ட்ரீல் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாகப் பதிவாகி உள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement