For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காஞ்சிபுரம் : அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

01:22 PM Jun 10, 2025 IST | Murugesan M
காஞ்சிபுரம்   அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை கோவிலம்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நிலையில், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் பெரியார் நகரில் உள்ள சிலரின் வீடுகளிலும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

Advertisement

அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் 3 தனிப்படைகள் அமைத்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement