For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்!

03:22 PM Feb 04, 2025 IST | Murugesan M
காவிரியில் அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை   மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பினார்.

Advertisement

மேலும், காவிரி ஆறு மூலம் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, காவிரி பாசன மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம் காவிரி நீர் சேமிப்பு, நீர் பகிர்வு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Advertisement

அத்துடன், தற்போது வரை காவிரியில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை எனவும் அவர் திட்டவட்டமாக விளக்கினார்.

Advertisement
Tags :
Advertisement