கிருஷ்ணகிரி : 15 பேருடன் சென்ற அரசு பேருந்து ஏரியில் இறங்கியதால் பரபரப்பு!
03:20 PM Jun 09, 2025 IST | Murugesan M
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பேருந்து ஏரியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து அரசம்பட்டி வரை செல்லக்கூடிய நகரப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நெடுங்கல் ஏரிக்கரையில் சென்றுக்கொண்டிருந்தது.
Advertisement
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஏரியில் இறங்கி அங்கிருந்த தென்னை மரத்தில் மோதி நின்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பேருந்திலிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
Advertisement
Advertisement