கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!
05:27 PM Jun 09, 2025 IST | Murugesan M
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் தீப்பற்றி எரிந்தது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 7-ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல் மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
Advertisement
கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் சென்றபோது கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கடல் கண்காணிப்பு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கப்பலில் 22 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும், மாயமான 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement