For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

02:51 PM Jun 06, 2025 IST | Murugesan M
கொல்கத்தா   இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்குப் பதிலளிக்கும்போது அவதூறு கருத்துகளைத் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட புனே சட்டக்கல்லூரி மாணவிக்குக் கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான ஷர்மிஸ்தா பனோலி என்பவர் ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வாய் திறக்கவில்லை எனக்கூறி பாலிவுட் நடிகர், நடிகைகளையும் மற்றும் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றியும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

Advertisement

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவான மாணவியை குருகிராமில் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பிணை கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மாணவிக்கு எதிரான புகாரில் எந்த புகாரும் இல்லை எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது. மேலும், மாணவிக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement