For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

05:50 PM May 06, 2025 IST | Murugesan M
கோடநாடு கொலை  கொள்ளை வழக்கு   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்..

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஜெயலலிதாவின் முன்னால் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக,  ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாகக் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேரில் ஆஜரானார். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement