கோவிட் தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை : மத்திய அரசு விளக்கம்!
07:03 PM Jul 02, 2025 IST | Murugesan M
கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்ததற்கு கொரோனோ தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்நிலையில், கோவிட் தடுப்பூசிகளுக்குப் பிறகு நிகழ்ந்த திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement