For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

07:00 PM Nov 03, 2025 IST | Ramamoorthy S
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்

கோவை விமான நிலைய பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வடுத்துள்ள பதிவில் பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்..

Advertisement

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் அறிவாலய  ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலினோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என நயினார் நாகேந்தரின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement