For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

03:36 PM Oct 05, 2025 IST | Ramamoorthy S
சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவர் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோ மீட்டர் தொலைவும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோ மீட்டர் தொலைவும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

திண்டுக்கல் - காரைக்குடி நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்ததை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement
Advertisement
Tags :
Advertisement