சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
06:33 AM Mar 13, 2025 IST | Ramamoorthy S
சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக, காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement