சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!
10:40 AM Nov 05, 2025 IST | Murugesan M
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சரக்கு வேன் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் வாடகைக்கு சரக்கு வேனை இயக்கி வரும் நிலையில், தனது வீட்டில் இருந்து கோயம்பேடுக்கு சரக்கு வாகனத்துடன் புறப்பட்டுள்ளார்.
Advertisement
அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த டாரஸ் லாரி சரக்கு வேன் மீது மோதியுள்ளது.
இதில், சரக்கு வேனின் முன்பகுதி தீப்பற்றி எரிந்ததால் கமலக்கண்ணன் உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பியுள்ளார்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement