சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி!
07:04 PM Jun 09, 2025 IST | Murugesan M
சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மாலையில் பலத்த காற்று வீசியது.
Advertisement
இந்நிலையில் ஈசிஆர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் புழுதி பறந்ததால் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
உத்தண்டி சுங்கச்சாவடியின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த தனியார் ராட்சத விளம்பர பேனர் பலத்த காற்றால் கிழிந்து சாலையில் தொங்கியது.
Advertisement
சுமார் 40 அடிவரை ராட்சத பேனர் தரை வரை தொங்கியதால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்வது சிரமமாக இருந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக பேனரை முழுமையாகக் கிழித்து அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Advertisement