ஜோ பைடன், ஒபாமா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
05:04 PM Jan 31, 2025 IST | Murugesan M
அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் ஒபாமாதான் காரணம் என டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒபாமாவும் பைடனும் இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்ததால், விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டதாக விமர்சித்தார்.
Advertisement
அத்துடன், கடந்த 2020-இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறை தரம் குறைந்ததாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
Advertisement
Advertisement