For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி - நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

05:44 PM Mar 09, 2025 IST | Ramamoorthy S
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி   நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜக்தீப் தங்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி தன்கரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement