For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

10:50 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்   விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8 புள்ளி ஒரு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.

Advertisement

மறுபுறம் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து விடும் நோக்கில் பாஜக களம் காண்கிறது. இதனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் இந்த தேர்தலை ஒட்டி 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 19 ஆயிரம் ஊர்காவல் படையினர், 35 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 8 புள்ளி ஒரு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜெய் சங்கர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஜனநாயக கடமையாற்றினர்.

இதேபோல், டெல்லியில் உள்ள கேந்திரிய வித்தியாலயா வாக்குச்சாவடி மையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது வாக்கினை பதிவு செய்தார்.

Advertisement
Tags :
Advertisement