For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!

12:28 PM Jun 10, 2025 IST | Murugesan M
தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்

30 ஆண்டுகளுக்கு முன்பு  தந்தை வாங்கிய 5 ஆயிரம் பங்குகளைக் கண்டுபிடித்த மகன், ஒரே இரவில் 80 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரரான நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்தபோது அவரது தந்தை 1995ஆம் ஆண்டு ஜிண்டால் விஜய்நகர் ஸ்டீல் நிறுவனத்திடம் வாங்கிய 5 ஆயிரம் பங்குகளின் சான்றிதழ் கிடைத்துள்ளது.

Advertisement

ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம், 2005ஆம் ஆண்டு JSW ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்ததால், அந்த பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.

அதன்படி, அந்த இளைஞர் கண்டுபிடித்த பங்குகளின் மதிப்பு தற்போது 80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் அந்த இளைஞர் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து  சௌரப் தத்தா என்பவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement