For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

06:45 PM Jun 10, 2025 IST | Murugesan M
தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு   காவல்துறை

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விடுதி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இந்த நிலையில், பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகத் தெரிவித்த காவல்துறை, இரண்டு சிசிடிவி கேமராக்களைத் தவிர விடுதியில் வேறு எந்த சிசிடிவி கேமராவும் செயல்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

10 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் ஆங்காங்கே முள்வேலிகள் உடைந்துள்ளதாகவும், பெண் விடுதி காப்பாளர் விடுப்பில் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

Advertisement

விடுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு காவல்துறை சார்பாக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Tags :
Advertisement