For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருச்செந்தூர் - பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

03:40 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
திருச்செந்தூர்   பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சக பணியாளர்களுடன் அவர் சென்றிருந்தார்.

Advertisement

அப்போது அடைப்பை சரிசெய்ய பாதாள சாக்கடையில் இறங்கிய போது கழிவுநீரில் அவர் மூழ்கினார். தகவல் அறிந்த சென்ற தீயணைப்புத் துறையினர் சுடலைமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுடலைமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே, மாற்றத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement