For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் மாற்றம் - தேவஸ்தானம் அறிவிப்பு!

07:44 AM Apr 30, 2025 IST | Ramamoorthy S
திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் மாற்றம்   தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் நாளை முதல் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு நாளை முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம்போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் எனவும், இதற்கான வெள்ளோட்டம் நாளை காலை 6 மணி முதல் தொடங்கும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement