For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு - கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

12:25 PM Feb 04, 2025 IST | Sivasubramanian P
அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு   கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

திருப்பரங்குன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், ஹிந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, தமிழக பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர்  பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர்  கு. சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் திரு. T.V. சசிக்குமார், மற்றும் தமிழக பாஜக சகோதரர்கள் என பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக  திமுக அரசு நடந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனறும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement