For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம் - ஆர்சிபி நிர்வாகம்!

12:02 PM Jun 05, 2025 IST | Murugesan M
துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம்    ஆர்சிபி நிர்வாகம்

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்திற்கு அந்த அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்  "இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் தாங்கள் மிகவும் வேதனையடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அனைவருடைய பாதுகாப்பும், நலமான வாழ்வும்தான் தங்களுக்கு முக்கியம் எனவும் இந்தத் துயரமான உயிரிழப்புகளுக்கு ஆர்.சி.பி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமது ஆதரவாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement