தைப்பூச திருவிழா - சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தி, பால்குடம் எடுத்த பக்தர்கள்!
07:24 AM Feb 11, 2025 IST | Ramamoorthy S
தைப்பூசத்தையொட்டி சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கப்பூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது.
Advertisement
நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும் ஊர்வலமாக வந்து ஊர்முருகப்பெருமானை வழிபட்டனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement