நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தனியாங்கி கதவுகள் கொண்ட புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் : ஐசிஎஃப்
02:23 PM Jun 11, 2025 IST | Murugesan M
நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தனியாங்கி கதவுகள் கொண்ட புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஐசிஎஃப் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் புறநகர் ரயிலிலிருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Advertisement
மும்பையில் தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏசி அல்லாத 2 மின்சார ரயில்களை வடிவமைக்கும் பணியில் ஐசிஎஃப் ஈடுபட்டுள்ளது.
தானியங்கி கதவுகள் கொண்ட ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் 2 வென்டிலேட்டர் அலகுகள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மும்பையைத் தொடர்ந்து சென்னையிலும் தானியங்கி கதவுகள் கொண்ட ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஐசிஎஃப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement