For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு : சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

01:14 PM Jun 10, 2025 IST | Murugesan M
நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு   சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின்போது சென்னையில் பெய்த மழை காரணமாக மின்சாரம் தடைப்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மறு தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement