நீலகிரியில் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக தீவிர வாகன சோதனை!
12:11 PM Feb 05, 2025 IST | Murugesan M
நீலகிரியில் அதிகரித்துவரும் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக பைக்காரா பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது போன்ற குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
Advertisement
இதனை தடுக்கும் விதமாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலான வனத்துறையினர் பைக்காரா பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement