நீலகிரி - தேவாலா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!
07:45 PM Apr 27, 2025 IST | Ramamoorthy S
நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பந்தலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் ஆண்டுதோறும் தாயகம் திரும்பிய தமிழர்களால் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் தாயகம் திரும்பிய தமிழர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Advertisement
முன்னதாக அம்மன் வேடமணிந்த பெண் ஒருவர் மேளதாளத்துடன் நடனமாடி வந்ததை பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement