நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து ரத்து!
01:39 PM Jun 10, 2025 IST | Murugesan M
2015-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து என்பது போர் அல்லது இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது.
Advertisement
நேபாளத்துக்கான இந்த அந்தஸ்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அமெரிக்காவில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து விதிமுறைகளின் கீழ் உள்ள நேபாள ஷமக்கள் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் வெளியேறக்
கெடு விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement