For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பங்குனி உத்திரம் - பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

07:48 AM Apr 11, 2025 IST | Ramamoorthy S
பங்குனி உத்திரம்    பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர்.

Advertisement

இந்நிலையில்‌ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement