பாகிஸ்தான் கொடியுடன் கப்பல்கள் நுழைய தடை - மத்திய அரசு!
06:58 PM May 03, 2025 IST | Murugesan M
இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல் இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement