For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாக். அமைச்சர் எக்ஸ் தள கணக்கை முடக்கிய இந்தியா!

06:15 PM May 03, 2025 IST | Murugesan M
பாக்  அமைச்சர் எக்ஸ் தள கணக்கை முடக்கிய இந்தியா

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலைத்தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தப் போவதாகப் பாகிஸ்தான் உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலைத்தள கணக்கு  முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement