பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தொடர் கொலை சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கோவை, பீளமேட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தஞ்சையில் பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தவர், பாஜக பெண் நிர்வாகியைக் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முதிய தம்பதி கொலையால் சிவகிரியில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்றும் திமுக ஆட்சியில் தோட்டத்தில் வசித்து வந்தவர்கள் காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை வெளியேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர் கொலை சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் எழுகிறது என அவர் தெரிவித்தார்.