புதுக்கோட்டை : விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!
05:05 PM Jun 09, 2025 IST | Murugesan M
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வைகாசி விசாக தினமான இன்று விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
அமைச்சர் மெய்ய நாதன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமானோர் வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அப்போது பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க ஆடிபாடி மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement