For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெரம்பலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது!

03:21 PM May 06, 2025 IST | Murugesan M
பெரம்பலூர் அருகே சுமார் ரூ 1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது

பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

லப்பைக்குடிக்காட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்கள் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது.

Advertisement

விசாரணையில் அதே வங்கியில் நகைக்கடன் பிரிவு அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த  ஆகாஷ் சௌகான் என்பவர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement